tag:blogger.com,1999:blog-3146664797073847568.post2401491826844023404..comments2023-10-22T09:12:00.235-04:00Comments on A Pilgrims' Progress: Soundarya Lahari 41SRINIVAS GOPALANhttp://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3146664797073847568.post-31223599048793044322011-05-14T09:48:20.901-04:002011-05-14T09:48:20.901-04:00நீரில் இருந்தே பூமி, மண் தோன்றியது. அம்பிகை மணிபூ...நீரில் இருந்தே பூமி, மண் தோன்றியது. அம்பிகை மணிபூரகத்தில் நீருண்ட மேகம் போன்ற சிவனிடம் மின்னல் கொடியாகக் காட்சி அளித்தவள், இங்கே மூலாதாரத்தில் லாஸ்யம் என்னும் அற்புதமான நடனம் செய்கிறாள். சிருஷ்டிக்கு இருப்பிடம் இதுவே. இங்கே தான் அம்பிகை ப்ரக்ருதி ரூபமாக லாஸ்ய நர்த்தனம் செய்து கொண்டு, ஆநந்தபைரவரான ஸதாசிவனைத் தாண்டவம் செய்யும் போது பார்க்கிறாள். சிருஷ்டி ஆரம்பிக்கிறது. உலகம் உற்பத்தி ஆகிறது. அம்பாளும் ஈசனும் ஒருவருக்கொருவர் சமம். அதனாலேயே ஸமயா என்றே அம்பிகை அழைக்கப் படுகிறாள். ரூபம், நாமம், அவஸ்தானம், அநுஷ்டானம், அதிஷ்டானம் ஆகிய ஐந்து சமங்களையும் இங்கே சொல்லுவார்கள். அனைத்து ஆதார சக்கரங்களிலும் அதிஷ்டானசமமும், ஜனக்ஜனனியாக அநுஷ்டான சமமும், லாஸ்ய தாண்டவங்களால் அவஸ்தான சமமும், இருவரின் சிவந்த நிறத்தால் ரூப சமமும், ஒரே மாதிரியான பெயர்களால், பைரவர், பைரவி போன்ற பெயர்களால் நாம சமமும் ஏற்படுகிறது.<br /><br />அகுலா ஸமயாந்தஸ்த்தா ஸமயாசார தத்ப்ரா என லலிதா சஹஸ்ரநாமம் கூறும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com