Wednesday, September 12, 2012

Chapter 7 - Jnaana Vijjnaana Yoga [11-20]

11.
ப(फ)லம்  ப(फ)லவதாம் சாஹம் காம ராக விவர்ஜிதம்
தர்மா விருத்தோ பூதேஷு காமோ(அ)ஸ்மி பரதர்ஷப
அர்ஜுனா! பலமானவற்றில் நான் ஆசையற்ற மற்றும் பற்றற்ற பலமாக இருக்கிறேன். எல்லா உயிர்களிலும் நான் தர்மத்திற்கு எதிரியாக இல்லாத ஆசையாக இருக்கிறேன்.

12.
யே சைவ ஸாத்த்விகா பாவா ராஜ ஸாஸ்தாம் அஸாச்ச யே 
மத்த ஏவேதி தாந்வித்தி ந த்வஹம் தேஷு தே  மயி
எவையெல்லாம் (பொருளோ/உயிரோ) சத்வ/ரஜஸ்/தமோ குணத்தோடு  உள்ளனவோ - அவை எல்லாமே என்னுள் இருந்து தொடங்கியவையே. அவை என்னுள் உள்ளன ஆனால் நான் அவற்றில் இல்லை.

13.
த்ரிபிர் குண மயைர் பாவைர்  ஏபி: ஸர்வமிதம் ஜகத்
மோஹிதம் நாபிஜாநாதி மாமேப்ய: பரமவ்யயம்
இயற்கையின் மூன்று குணங்கள் ஆகிய இவற்றால் மயங்கிய எல்லாமே, இந்த உலகம் முழுதுமே நான் இவற்றில் இருந்து தனித்து, அழிவற்று இருப்பவன் என்பதை அறியாமல் உள்ளது.

14.
தைவீ  ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா
மாமேவ யே பிரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே
இத்தகைய குணங்களால் ஆன, என்னைப் பற்றிய இந்த தெய்வீக மாயையானது கடப்பதற்கு கடினமானது. என்னைச் சரண் அடைந்தவர்கள் மட்டுமே இதைக் கடக்கிறார்கள்.

15.
ந மாம் துஷ்க்ருதிநோ மூடா: பிரபத்யந்தே நராதமா:
மாயயா பஹ்ருத ஜ்ஞாநா ஆஸுரம் பாவமாச்ரிதா:
மனிதர்களில் கீழான பாவம் செய்பவர்களும், மாயையில் உள்ளவர்களும் என்னை அடைய விரும்பாதவர். எவர் அறிவு மாயையால் அழிக்கப்பட்டுள்ளதோ, அவர் அசுர வழியை பின் பற்றுவார்.

16.
சதுர்விதா பஜந்தே மாம் ஜ நா: ஸு க்  ருதிநோ (அ)ர்ஜூந
ஆர்தோ ஜிஜ்ஞாஸுர் அர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப
அர்ஜுனா! நான்கு விதமான குணவான்கள் என்னை வணங்குவார்கள். பரதர்களின் தலைவனே! அவர்கள் - துக்கித்து இருப்பவர்கள், ஞானத்தை விழைபவர்கள், செல்வத்தை விழைபவர்கள், மற்றும் ஞானிகள் (சான்றோர்கள்).

17.
தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏக பக்திர் விசிஷ்யதே
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோ(அ)த்யர்தம் அஹம் ஸ ச மம ப்ரிய:
இவர்களில், எப்பொழுதுமே பரப்ரம்மத்தைக் குறித்து உறுதியுடன், பற்றுடன் இருக்கும் சான்றோர்களே சிறந்தவர்கள். ஏனென்றால் நான் சான்றோனின் மிகுதியான அன்பிற்கு பாத்திரமானவன். அது போலவே அவனும் என் அன்பிற்குரியவன்.

18.
உதாரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்
ஆஸ்தித: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் கதிம்
இவர்கள் எல்லோருமே சிறந்தவர்கள் தான். ஆனால் நான் சான்றோனை என்னுள் ஒருவனாகவே கருதுகிறேன். ஏனென்றால் அவனே என்னை உறுதியாக மனதில் எண்ணி, என்னையே அடைய வேண்டிய ஒன்றாக மனதில் நிலை நிறுத்தி உள்ளான்.

19.
பஹூநாம் ஜந்ம நாமந்தே ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்யதே
வாஸுதேவ: ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸுதுர்லப:
பல பிறப்பிற்குப் பின், சான்றோன் எல்லாமே வசுதேவம் என்று உணர்ந்து என்னை அடைகிறான். அப்படிப்பட்ட ஒரு மகாத்மாவை காண்பது அரிது.

20.
காமைஸ் தைஸ்தைர் ஹ்ருத ஜ்ஞாநா: ப்ரபத்யந்தே(அ)ந்யதேவதா:
தம் தம் நியமம் ஆஸ்தாய ப்ரக்ருத்யா நியதா; ஸ்வயா:
எவனது அறிவு, ஏதோ ஆசையினால் குடி கொண்டுள்ளதோ - அவன் பிற தேவர்களிடம் செல்கிறான். தங்கள் இயற்கை குணங்களுக்கு ஏற்ப ஏதோ நியமங்களை கடைப்பிடிக்கிறான்.  


விசாரம்
இந்த அத்தியாயத்தின் பெயர் ஞான விஞ்ஞான யோகம். Science என்பதை விஞ்ஞானம் என்று கூறுகிறோம். ஒரு விஷயத்தை practical ஆக நிருபிக்கப்பட்டால் அதை scientifically proven என்று சொல்கிறோம். இது போல இந்த யோகம் பகவான் குறித்த ஞானம் எப்படி அவரை உணர்ந்து தெரிந்து கொள்ளும் போது விஞ்ஞானம் ஆகிறது என்பதைக் கூறுகிறது.

எப்படி உணர்ந்து தெரிந்து கொள்ளும் நிலையை அடைவது? பார்க்கும் எல்லாவற்றிலும் ஈஸ்வர ரூபமாகப் பார்க்கும் போது இந்த உணர்வு கிடைக்கும். இந்த உலகில் இருக்கும் எல்லாமே பகவானால் உண்டாக்கப்பட்டவை, அவையே பகவானும் ஆகும். ஒரு பூமாலையில் எப்படி பல்வேறு புஷ்பங்கள் தொடுக்கப்பட்டுள்ளதோ, அதே மாதிரி எல்லா பொருட்களுமே ஈஸ்வரனோடு சம்பந்தப்பட்டவையே, அவனால் உருவாக்கப்பட்டவையே. வெளியில் தெரியும், தெரியாத பொருட்கள் எல்லாமே அவன் ரூபம் தான். அவனே அதன் சாரம். ஆனால் இதை உணர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு இயற்கையின் மூன்று குணங்களான - சத்வம், தமஸ் மற்றும் ரஜோ குணங்கள் மாயையாக இருந்து நம் கண்ணை மறைக்கின்றது. நம்மை ஈஸ்வரனை மறக்கச் செய்கிறது. இந்த மாயையை
எப்படி விலக்க முடியும் என்றால் அதற்கும் ஈஸ்வர கடாக்ஷம் வேண்டும்.

இறைவனை வேண்டுபவர்களை பொதுவாக 4 வகை கொண்டு பிரிக்கலாம் - ரொம்ப கஷ்டத்தில் இருப்பவர்கள், பொருட் செல்வம் வேண்டுபவர்கள், ஞானம் வேண்டுபவர்கள், மற்றும் ஞானிகள். முதலாவது பிரிவில் - கஷ்டத்தில் இருப்பவர்கள் ஏதோ உடல் உபாதையினால் வேண்டுபவர்கள் என்று கொள்ளலாம். இரண்டாவது பிரிவில் - வறுமையினாலோ, இல்லை இருக்கும் செல்வத்தில் திருப்தி இல்லாததாலோ வேண்டுபவர்களாக கொள்ளலாம். பெரும்பான்மையான பக்தர்கள் இந்த இரண்டு பிரிவில் வருபவர்கள் தான். ஞானம் வேண்டுபவர்கள் இறை ஞானம் அடைய முயற்சி செய்பவர்கள். அந்த நிலை அடைவது என்பதே தெய்வ சங்கல்பம் இருந்தால் தான் முடியும். லௌகீக வாழ்க்கைக்கு வேண்டிய ஞானம் வேண்டுபவர்கள் கூட இரண்டாவது பிரிவில் வந்து விடுவார்கள். இதை எல்லாம் தாண்டி நான்காவது பிரிவான ஞானி என்ற நிலையை அடைய ஒருவன் அந்த பிரம்மத்தைக் குறித்த பக்தியும், ஸ்ரத்தையும் கொண்டிருக்க வேண்டும். அந்த பக்தியும், ஸ்ரத்தையும் எல்லாவற்றையும் ஈஸ்வர ரூபமாகப் பார்த்து, பகவானை உணர்ந்து தெரிந்து கொள்ளும் போது தான் வரும். பிரம்மத்தை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டு, அதையே நினைத்துக் கொண்டு, இப்படி பல ஜென்மங்களைக் கடந்த பின்னரே அவனால் அந்த பிரம்மத்தை அடைய முடியும். அந்த உயரிய நிலையில் தான் அவன் மகாத்மா ஆகிறான். காண்பதற்கு அரியவன் ஆகிறான்.

முதல் இரண்டு பிரிவில் இருப்பவர்கள் மாயையினால் கட்டுண்டு இருக்கிறார்கள். நாமும் அந்த மாயை என்பதை விலக்கி, குறைந்த பக்ஷம் மூன்றாம் நிலையையாவது அடைய முயற்சிப்போம்.