Wednesday, July 13, 2011

Bhagavath Gita - Dhyaana Shloka

1.
ஓம் பார்த்தாய பிரதிபோதிதாம் பகவதா நாராயணேனஸ்வயம்
வ்யாசேன க்ரதிதாம் புராண முனினா மத்யே மகாபாரதம்
அத்வைதாம்ருத வர்ஷிநீம் பகவதீம் அஷ்டாதஸாத்யாயினீம்
அம்ப த்வாம் அணுசந்ததாமி பகவத் கீதே பவத் வேஷிநீம்

ஓம் பகவத் கீதையே! எதனால் பார்த்தன் ஸ்ரீமன் நாராயணனால் அறிவூட்டப் பட்டானோ, ஆதி முனிவரான வேத வியாசரால் மகாபாரதத்தின் உள்ளே எழுதப் பட்டதோ, தெய்வீகத் தாயே! மறு பிறவியை அழிப்பவளே! அத்வைதத்தின் அமிர்த மழையை பொழிபவளே! பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டதுமான கீதையே! பரிவான தாயே! உன்னை குறித்து தியானிக்கின்றேன்.


2.
நமோஸ்து தே வியாச விஷால புத்தே புல்லா அரவிந்தாயத பத்ர நேத்ர:
யேன த்வயா பாரத தைல பூர்ண: பிரஜ்வாலிதோ ஞானமய பிரதீபா:

வியாசரே! பரந்த அறிவும், முழுதும் மலர்ந்த தாமரை மலரின் இதழ்களைப் போன்ற கண்களையும் கொண்டவரே! தங்களால் ஞானம் என்னும் விளக்கு, மகாபாரதம் என்னும் எண்ணையால் நிரப்பப்பட்டு ஏற்றப்பட்டுள்ளது. உங்களுக்கு எனது வணக்கங்கள்.

3.
பிரபண்ண பாரிஜாதாய தோத்திர வேத்ரைக பாணயே
ஞான முத்ராய கிருஷ்ணாய கீதா அம்ரித துஹே நமஹா:

தன்னைச் சரண் அடைந்தவர்களுக்கு பாரிஜாத மரமாகவோ, கல்பதருவாகவோ இருந்து, அவர்களின் ஆசைகளை நிறைவேற்றும் கிருஷ்ணரே! சாட்டையை ஒரு கையில் வைத்திருப்பவரும், தேவ ஞானம் என்று முத்திரையை தன்னுள்ளே கொண்டவரும். பகவத் கீதை என்னும் அமிர்தப் பாலைக் கறப்பவரும் ஆன கிருஷ்ணரே! உங்களுக்கு எனது வணக்கங்கள்.


4.
சர்வோபநிஷதோ காவோ தோக்தா கோபால நந்தனா:
பார்த்தோ வத்ஸ சுதீர் போக்தா துக்தம் கீதாம்ரிதம் மஹத்

எல்லா உபநிஷத்களும் - பசுக்கள்; பால் கறப்பவர் - கிருஷ்ணர் என்ற இடையர் சிறுவன்; கன்று - பார்தனாகிய அர்ஜுனன்; தெளிந்த அறிவை உடைய மக்கள் - அதைப் பருகுபவர்கள்; அந்தப் பால் - கீதையின் அமிர்தம்.


5.
வஸுதே வஸுதம் தேவம் கம்ச சாணூர மர்தனம்
தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

உலகிற்கே ஆசிரியராக இருப்பவரும், வசுதேவரின் புத்திரர் ஆனவரும், கம்சன் மற்றும் சாணூரன் ஆகியோரைக் கொன்றவரும், தேவகியின் பரம ஆனந்தம் ஆகத் திகழ்பவரும் ஆன கிருஷ்ணரே! உங்களை வணங்குகிறேன்.


6.
பீஷ்ம துரோண ததா ஜயத்ரத ஜலா காந்தார நீலோத்பலா
சல்ய க்ராஹவதீ கிருபேண வஹநீ கர்ணேன வேலாகுலா
அஸ்வத்தாம விகர்ண கோர மகரா துர்யோதனா வர்திணீ
சோதீர்ண கலு பாண்டவை ரணனதீ கைவர்தக: கேசவ:

கேசவனைச் சாரதியாகக் கொண்டு யுத்தம் என்ற ஆற்றைப் பாண்டவர்கள் தாண்டினார்கள். இந்த ஆற்றின் கரைகளாக பீஷ்மரும், துரோணரும் இருந்தார்கள், நீராக ஜெயத்ரதன் இருந்தான், அதன் நீலத் தாமரையாக காந்தாரன் சகுனி இருந்தான், அதன் முதலையாக சல்யன் இருந்தான், அதன் சுழல் ஆக கிருபாச்சாரியார் இருந்தார், அதன் வேகமாக கர்ணன் இருந்தான், கொடிய முதலைகளாக விகர்ணனும் அஸ்வத்தாமனும் இருந்தார்கள், அதன் புதைகுழியாக துர்யோதனன் இருந்தான்.


7.
பாரா சர்ய வச: சரோஜம் அமலம் கீதார்த்த கந்தோட் கடம்
நாணா க்யாநக கேசரம் ஹரிகதா சம்போதனா போதிதம்
லோகே சஜ்ஜன ஷட் பதைர் அகரஹ: பேபீயமாணம் முதா:
பூயாத் பாரத பங்கஜம் கலிமலா பிரத்வம்சின ஸ்ரேயசீ:

வியாசரின் வார்த்தைகள் என்னும் குளத்தில் பிறந்ததும், கீதையின் அர்த்தம் என்னும் சுகந்தத்தில் மணப்பதும், பல கதைகளை அதன் தண்டாகவும் (ஆதாரமாகவும்), காளியின் தவறுகளைப் போக்கிய ஹரியின் உபன்யாசத்தால் முழுதும் மலர்ந்ததாகவும், உலகில் உள்ள நல்ல மனிதர்கள் என்னும் தேனீக்களால் பருகி இன்பப்படுவதும் ஆன இந்த மகாபாரதம் என்னும் தாமரை தினம்தோறும் நமக்கு நன்மையை அளிக்கட்டும்.


8.
மூகம் கரோதி வாசாலம் பண்கும் லண்கயதே கிரிம்
யத் கிருபா தமஹம் வந்தே பரமானந்த மாதவம்

பரம ஆனந்தத்தின் ஆதாரமான, எவரின் கருணை ஊமையை சொற்பொழிவாற்ற வைக்குமோ, முடவரை மலையைத் தாண்ட வைக்குமோ , அந்த மாதவனை வணங்குகிறேன்.


9.
யம் பிரம்மா வருணேந்திர ருத்ர மருத: ஸ்துன்வந்தி திவ்யை: ஸ்தவை:
வேதை: சாங்க பத கிரமோபநிஷதைர் காயந்தி யம் சாமக:
த்யானா வஸ்தித தத்கதேன மனசா பஷ்யந்தி யம் யோகினோ
யச்யாந்தம் ந விது: சுரா சுரகனா தேவாய தஸ்மை நமஹா:

பிரம்மன், இந்திரன், வருணன், ருத்ரன் மற்றும் மருதர்களால் புனித பாசுரங்களால் புகழப் படுபவரை, சாம வேதம் பாடுபவர்களால், வேதம் மற்றும் அதன் அங்கமான பதம் மற்றும் க்ரம முறைகளில், உபநிஷத்களில் பாடப் படுபவரை, தியானம் மூலம் தங்களின் மனதை அவர் மீது செலுத்திய யோகிகளால் பார்க்கப் படுபவரை, தேவர்களாலும், அசுரர்களாலும் எவருடைய இறுதியைக் காண முடியாதோ அவரை - அந்தக் கடவுளை நான் வணங்குகிறேன்.

3 comments:

  1. GURU POORNIMA ANNIKKU SAGE vYAASAR PARRI PADIKKARATHU ROMBA SANTHOSHAM GOD BLESSYOU sRINIVAS GOPALAN

    ReplyDelete
  2. andthe picture and geethaslokams are great, please continue the goodwork. Baghavaan pakkaththil iruppaar. vallisimhan

    ReplyDelete
  3. Thanks Mrs. Narasimhan.
    I will be putting 10 shlokas a week and a little Vichaara on that. Please keep following.

    ReplyDelete