Tuesday, January 10, 2012

Chapter 5 - Sannyaasa Yoga [20-29]

20.
ந ப்ரஹ்ருஷ்யேத் ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத் ப்ராப்ய சாப்ரியம்
ஸ்திரபுத்திர் அஸம்மூடோ ப்ரஹ்மவித் ப்ரஹ்மணி ஸ்தித:
பிரம்மத்தில் லயித்திருந்து, நிலையான புத்தியுடன், கலங்காமல் உள்ள பிரம்மத்தை அறிந்தவர் நல்லது கிடைக்கும் போது மகிழாமலும், கெட்டது கிடைக்கும் போது வருந்தாமலும் இருப்பார்.

21.
பாஹ்யஸ் பர்சேஷ்வ ஸக்தாத்மா விந்தத்யாத்மநி யத் ஸுகம்
ஸ ப்ரஹ்ம யோக யுக்தாத்மா ஸுகம் அக்ஷயம் அஸ்நுதே
தன்னை வெளித் தொடர்புகளில் இருந்து விலக்கி வைத்திருப்பதன் மூலம் அவர் பிரம்மத்தில் மகிழ்ச்சியைக் காண்கிறார். பிரம்மத்தைக் குறித்து தான் த்யானிப்பதில் இருந்து அவர் எல்லையில்லாத பேரானந்தத்தை அடைகிறார்.

22.
யே ஹி ஸம்ஸ்பர்சஜா போகா து:க யோநய ஏவ தே
ஆத்யந்தவந்த: கௌந்தேய ந தேஷு ரமதே புத:
அர்ஜுனா! தொடர்புகளின் மூலம் ஜனிக்கும் எல்லா ஆனந்தமும் வலியை உண்டு பண்ணக் கூடியவையே. ஏன் என்றால் அவைகளுக்கு ஒரு ஆதியும், அந்தமும் உள்ளன. அறிவுள்ளவர்கள் அதில் ஆனந்தப்பட மாட்டார்கள்.

23.
சக்நோதீஹைவ ய: ஸோடும் ப்ராக்ஷரீர விமோக்ஷணாத்
காமக்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த: ஸ ஸுகீ நர:
எவன் ஒருவன், இந்த உடல் விமோசனம் (மரணம்) பெறுவதற்கு முன்பே, ஆசை மற்றும் கோபம் இவற்றால் தோன்றும் உணர்வைத் தாங்கும் சக்தியைக் கொண்டுள்ளானோ - அவனே யோகி, அவனே சுகமாக இருக்கும் மனிதன்.

24.
யோ(அ)ந்த: ஸுகோ(அ)ந்தராராமஸ் ததாந்தர் ஜ்யோதிர் ஏவ ய:
ஸ யோகீ ப்ரஹ்ம நிர்வாணம் ப்ரஹ்மபூதோ(அ)திகச்சதி
எவன் ஒருவன் தன்னுள்ளே ஆனந்தமாக இருக்கிறானோ, எவன் தன் உள்ளே சுகித்து இருக்கிறானோ, எவன் தன்னுள்ளே ஜோதி ஸ்வரூபமாக ஒளிர்கிறானோ அத்தகைய யோகி ஆனவன் மோக்ஷம் என்ற பரிபூரண நிர்வாண நிலையை அடைந்து அவனே பிரம்மம் ஆகிறான்.    

25.
லபந்தே ப்ரஹ்ம நிர்வாணம் ருஷய: க்ஷீணகல்மஷா:
சிந்ந த்வைதா யதாத்மாந: ஸர்வ பூதஹிதே ரதா:
ரிஷிகள் தங்களின் பாவங்களைத் தொலைத்து,  பரிபூரண நிர்வாண நிலையாகிய மோக்ஷத்தை அடைந்து, த்வைத நிலையை (சுகம்/துக்கம், ஜனனம்/மரணம், போன்ற எதிர்மறை இரட்டை நிலைகளை) விட்டொழித்து, தங்களைக் கட்டுப்படுத்தி, லோகத்தில் உள்ள எல்லா உயிர்களின் க்ஷேமத்திலேயே குறியாக இருப்பார்கள்.

26.
காம க்ரோத வியுக்தாநாம் யதி நாம் யதசேதஸாம்
அபிதோ ப்ரஹ்ம நிர்வாணம் வர்ததே விதிதாத்மநாம்
எவர்கள் ஆசை மற்றும் கோபம் இவற்றில் இருந்து விடுபட்டுள்ளார்களோ, எவர்கள் தங்களின் எண்ணங்களைக் கட்டுக்குள் கொண்டுள்ளார்களோ, எவர்கள் பிரம்மத்தை உணர்ந்துள்ளார்களோ, அப்படி தங்களைக் கட்டுப்படுத்திய சாதுக்களுக்கு பரிபூரண நிர்வாணம் ஆகிய மோக்ஷ நிலை அவர்களைச் சுற்றி எல்லாத் திசைகளிலும் உள்ளது.

27.
ஸ்பர்சாந் க்ருத்வா பஹிர் பாஹ்யாம் ச்சக்ஷச் சைவாந் தரே ப்ருவோ:
ப்ராணாபாநௌ ஸமௌ க்ருத்வா நாஸாப் யந்தர சாரிநௌ
வெளித் தொடர்புகள் எல்லாவற்றையும் மூடி, பார்வையை புருவத்தின் இடையே நிலைத்து, மூக்கின் வழியே உள்வாங்கும் / வெளியேறும் மூச்சை சமப்படுத்தி,

28.
யதேந்த்ரிய மநோ புத்திர் முநிர் மோக்ஷ பராயண:
விகதேச்சாபய க்ரோதோ ய: ஸதா முக்த ஏவ ஸ:
இந்திரியங்கள், மனம், அறிவு இவற்றை அடக்கி, மோக்ஷம் ஒன்றையே உன்னதக் குறிக்கோள் ஆகக் கொண்டு, ஆசை, பயம், கோபம் இவற்றை விலக்கிய முனிவர்கள் எப்பொழுதுமே விடுபட்டவர்கள் ஆகிறார்கள்.

29.
போக்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வ லோக மகேஷ்வரம்
ஸுஹ்ருதம் ஸர்வ பூதாநாம் ஜ்ஞாத்வா மாம் சாந்திம் ருச்சதி
எவன் ஒருவன் என்னை எல்லா யக்ஞம், மற்றும் தவத்தை அனுபவிப்பவனாகக் எண்ணுகிறானோ (அவற்றை எனக்கு அர்ப்பணிக்கின்றானோ), எல்லா உலகிற்கும் அதிபதியாக, எல்லா உயிர்களுக்கும் நண்பனாக என்னை எண்ணுகிறானோ, அவனுக்கு அமைதி உண்டாகட்டும்.

இதி ஸ்ரீமத் பகவத் கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோக சாஸ்த்ரே ஸ்ரீ க்ரிஷ்ணார்ஜுந ஸம்வாதே ஸந்ந்யாஸயோகோ நாம பஞ்சமோ(அ)த்யாய:   


விசாரம்
'வைஷ்ணவ ஜனதோ' என்று ஒரு பாடல் இருக்கிறது - காந்திஜிக்கு மிகவும் பிடித்தமானது, அதோடு DK பட்டம்மாள் தான் நினைவுக்கு வருவார். அந்த பாடல் ஒரு உண்மையான வைஷ்ணவனின் தகுதியைக் கூறுகிறது. அவன் நெற்றியில் உள்ள தென்கலை/வடகலை திருமண்ணைக் கொண்டு அவன் வைஷ்ணவன் ஆவதில்லை. எவன் மற்றவரின் துயரைத் தன துயராகக் கொண்டு, அதைப் போக்க எண்ணுகிறானோ, லோக க்ஷேமத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளானோ - அவனே வைஷ்ணவன். Theoretically இது வைஷ்ணவர்களைக் குறித்தாலும், உண்மையில் இது எல்லோருக்கும் பொருந்தக் கூடியது தான். 


சனாதன தர்மத்தில் சொல்லப்படும் மந்திரங்களில் ஒரு social wellbeing கணக்கில் கொள்ளப்படுகிறது. தான், தனது குடும்பம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்ளாமல், உலகம் முழுவதும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு சொல்லப்படும் ஸ்லோகம்:
1. காலே வர்ஷது பர்ஜன்ய ,
பிருத்வி சஸ்ய ஷாலினி ,
தேசோ யாம் க்ஷோப ரஹித ,
சஜ்ஜன சந்து நிர்பய.

மழை காலத்தில், மழை நேரத்திலும், அமோகமாகவும் பெய்யட்டும்,
பூமி பயிர்களால் நன்கு சூழப்படட்டும்
தேசம் பிரச்சனைகள் இன்றி சுபமாக இருக்கட்டும்
நல்ல மக்கள் பயம் இன்றி இருக்கட்டும்

2. ஸ்வஸ்தி ப்ரஜாப்ய பரிபால்யநந்தாம் ,
ந்யாயேன மார்கேன மஹீம் மஹீசாம்,
கோ ப்ராஹ்மநேப்யோ சுபம் அஸ்து நித்யம்,
லோகா சமஸ்தா சுகினோ பவந்து.

தேசத்தின் ராஜாவுக்கு மங்களமே உண்டாகட்டும்
எவர் மக்களை நன்றாகக் காத்து, நேர்மையான வழியில் செல்லட்டும்
பசுக்களும் (செல்வங்கள்), பிராம்மணர்களும் தினமும் சுப வாழ்வு வாழட்டும்
லோகம் முழுவதும் சுகமாக இருக்கட்டும்

3. அபுத்ர புத்ரின சந்து,
புத்ரின சந்து பௌத்ரின,
அதன சதன,
சந்து ஜீவந்து சரத சதம்.

புத்திரர்கள் (புத்திரிகளையும் சேர்த்து தான்) இல்லாதவர்களுக்கு மக்கட் செல்வம் உண்டாகட்டும்,
புத்திரர்கள் உள்ளவர்களுக்கு பௌத்திரர்கள் (பேரன்/பேத்திகள்) உண்டாகட்டும்
ஏழையோ, பணக்காரனோ மக்கள் நூறு இலையுதிர் காலங்கள் காணட்டும்.

4. சர்வத்ர சுகின சந்து,
சர்வே சந்து நிராமயா,
சர்வே பத்ராணி பச்யந்து,
மா கச்சித் துக்க பாக் பவேத்.

மக்கள் எங்குமே சுகமாக இருக்கட்டும்,
எல்லா மக்களும் வியாதி இல்லாமல் இருக்கட்டும்,
எல்லா மக்களும் பத்திரமாக உணரட்டும்
எவருமே, எங்குமே துக்கம் இல்லாமல் இருக்கட்டும்.

5. ஓம் சர்வேஷாம் ஸ்வஸ்திர் பவது,
ஓம் சர்வேஷாம் ஷாந்திர் பவது
ஓம் சர்வேஷாம் பூர்ணம் பவது
ஓம் சர்வேஷாம் மங்களம் பவது

எங்கும் வசதி இருக்கட்டும்
எங்கும் அமைதி இருக்கட்டும்
எங்கும் உபரி இருக்கட்டும்
எங்கும் நல்லதே நடக்கட்டும்

6. சர்வத்ர சுகின சந்து,
சர்வே சந்து நிராமயா,
சர்வே பத்ராணி பச்யந்து,
மா கச்சித் துக்க பாக் பவேத்.

மக்கள் எங்குமே சுகமாக இருக்கட்டும்,
எல்லா மக்களும் வியாதி இல்லாமல் இருக்கட்டும்,
எல்லா மக்களும் பத்திரமாக உணரட்டும்
எவருமே, எங்குமே துக்கம் இல்லாமல் இருக்கட்டும்.

7. ஓம் சர்வேஷாம் ஸ்வஸ்திர் பவது,
ஓம் சர்வேஷாம் ஷாந்திர் பவது
ஓம் சர்வேஷாம் பூர்ணம் பவது
ஓம் சர்வேஷாம் மங்களம் பவது

எங்கும் வசதி இருக்கட்டும்
எங்கும் அமைதி இருக்கட்டும்
எங்கும் உபரி இருக்கட்டும்
எங்கும் நல்லதே நடக்கட்டும்

ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி

எங்கும் சாந்தி நிலவட்டும்.

ஆசை, பயம், கோபம் இவற்றை விட்டு, உடலையும், மனதையும் கட்டுப்படுத்தி, லோக க்ஷேமத்தை மட்டுமே எண்ணி, பிரம்மத்தை குறித்து தியானம் செய்வது தான் அதனை அடையும் வழி. அந்த தியானத்தின் பலனையும் முன்பே சொன்ன மாதிரி லோக அதிபதி ஈஸ்வரனுக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும். அந்த தியானம் செய்ய அவசியமானது பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி. அது குறித்து அடுத்து பார்ப்போம்.

1 comment:

  1. //எவன் மற்றவரின் துயரைத் தன துயராகக் கொண்டு, அதைப் போக்க எண்ணுகிறானோ, லோக க்ஷேமத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளானோ - அவனே வைஷ்ணவன். //

    வைஷ்ணவன் பற்றி சிறப்பான விளக்கம்.

    //பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி. அது குறித்து அடுத்து பார்ப்போம்.//

    பிராணாயாமம் பற்றி தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    ReplyDelete