Tuesday, August 16, 2011

Chapter 1 - Arjuna Vishaadha Yoga [41-47]

41.
அதர்மாபி பவாத் க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குல ஸ்த்ரிய:
ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர:
கிருஷ்ணா! பக்தியின்மை அதிகரிக்கும் போது, அக்குலத்தில் உள்ள பெண்கள் துஷ்டர்கள் ஆகிறார்கள். வர்ஷ்நேயா! பெண்கள் துஷ்டர்கள் ஆகும் போது அங்கே வர்ணங்களின் கலப்பு ஏற்படுகிறது.

42.
ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய ச
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதக க்ரியா:
வர்ணங்கள் இடையே ஏற்படும் குழப்பம் (கலப்பு), குலங்களை அழிப்பவர்களுக்கு நரகத்தைப் பெற்றுத் தருகிறது. ஏனென்றால் அவர்களின் பித்ருக்களுக்கு அவர்களால் தர்ப்பண பிண்டங்கள் கிடைக்காமல் போகிறது.

43.
தோஷைர் ஏதை: குலக்நாநாம் வர்ணஸங்கர காரகை:
உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா: குலதர்மாச்ச சாஸ்வதா:
குலங்களை அழிப்பவர்களின் இந்த பாபச் செயல்கள் வர்ணங்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துவதால், அந்த வர்ணம் மற்றும் குலம் ஆதி காலம் முதல் செய்து வரும் சமய தர்மங்கள் அழிகின்றன.

44.
உத்சந்ந குலதர்மாணாம் மனுஷ்யாணாம் ஜனார்தந:
 நரகே நியதம் வாஸோ பவதீத் யநு சுஸ்ரும:
ஜனார்தனா! இப்படி சமய தர்மங்கள் அழிக்கப்பட்ட குலத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு, நரகத்தில் கால வரை இன்றி வசிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்துள்ளோம்.

45.
அஹோ பத மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம்
யத்ராஜ்ய ஸுகலோபேந ஹந்தும் ஸ்வஜநம் உத்யதா:
ஐயோ! ராஜ்யத்தின் சுகம் என்னும் பேராசையால் நாம், நமது குல மக்களையே கொல்லும் அளவிற்குத் துணிந்து பெரும் பாபத்தைச் செய்கிறோம்.

46.
யதி மாம் அப்ரதீகாரம் அசஸ்த்ரம் சஸ்த்ரபாணைய:
தார்தராஷ்டிரா ரணே ஹந்யுஸ் தந்மே க்ஷேமதரம் பவேத்
திரிதராஷ்ட்ரனின் பிள்ளைகள் அவர்களின் கையில் ஆயுதங்களுடன், எதிர்ப்பு தெரிவிக்காமல், நிராயுதபாணியாக இருக்கும் என்னைக் கொன்றால் - அதுவே எனக்கு சிறந்ததாக இருக்கும்.       

47.
ஸஞ்சய உவாச:
ஏவ முக்த்வார்ஜுந ஸங்க்யே ரதோபஸ்த உபாவிசத்
விஸ்ருஜ்ய ஸசரம் சாபம் சோக ஸம்விக்ந மானஸ:
ஸஞ்சயன் சொன்னது:
போர்க்களத்தின் மத்தியில் இவ்வாறு பேசிய அர்ஜுனன், தனது வில்லையும், அம்பையும் ஒதுக்கி வைத்து விட்டு, அவன் மனதில் சோகம் பொங்கி எழ ரதத்தின் இருக்கையில் அமர்ந்தான். 


ஹரி ஓம் தத் சத்
ஹரியே பரம்பொருள் - அதுவே உண்மை 
இதி ஸ்ரீமத் பகவத் கீதாஸு, உபநிஷத்ஸு, பிரம்ம வித்யாயாம், யோக சாஸ்த்ரே, ஸ்ரீ க்ரிஷ்ணார்ஜுன ஸம்வாதே அர்ஜுன விஷாத யோகோ நாம பிரதமோத்யாய:
இது ஸ்ரீமத் பகவத் கீதை, உபநிஷத், பிரம்மத்தைப் (ஆத்மாவைப்) பற்றிய கல்வி, யோக சாஸ்திரம் (வாழ்க்கையில் செல்ல வேண்டிய பாதையை குறிக்கும் நூல்), ஸ்ரீ கிருஷ்ணர் - அர்ஜுனன் இடையே நடந்த உரையாடல், அர்ஜுன விஷாத யோகம் என்ற முதல் அத்தியாயம்.

விசாரம்
வர்ஷ்நேயா - கிருஷ்ணரின் இன்னொரு பெயர் இது. அவரின் யது குலத்திற்கு வ்ருஷ்ணீ என்ற பெயர் உண்டு. அதன் வழித்தோன்றல் என்பது இதன் அர்த்தம்.

ஒவ்வொரு அத்தியாயம் முடிந்த பிறகு ஒரு முடிவுரையாக 'இதி பகவத் ..' என்ற வாக்கியம் வரும். உபநிஷத் மொத்தம் பதினெட்டு. வேதாந்தம் என்ற அழைக்கப்படும் வேதத்தின் இறுதிப் பகுதியில் வருவது. வேதாந்தம் = வேதம் + அந்தம் (இறுதி). பெரும்பாலும் உரையாடலாக வரும் இது ஆத்ம ஞானத்தைப் போதிப்பது. பகவத் கீதை பதினெட்டு உபநிஷத்களில் ஒன்றில்லா விட்டாலும், அது அவை அனைத்தின் சாரமாகக் கருதப்படுகிறது. It is the cream of the Upanishadhs.

கிருஷ்ணர் - அர்ஜுனன் உரையாடல் ஒரு relaxed environment இல் நடந்த உரையாடல் இல்லை. Eleventh Hour dilemma. போர் செய்யாவிட்டால் அவனுக்கும், பாண்டவர்களுக்கும் ஏற்படும் இழப்பு பெரியது. ராஜ்யமே கிடைக்காமல் போய் விடும். ஒரு do or die situation. சரி போனால் போகட்டும் என்று விடுவதற்கு அவர்கள் சன்யாசிகளும் இல்லை. ராஜ வம்சத்தில் வந்தவர்கள். 

அர்ஜுனனுக்கு இந்த இடத்தில வந்திருக்கும் situational dilemma போலவே நாமும் நமது வாழ்க்கையில் சில நேரங்களில் சூழ்நிலைக் கைதிகள் ஆகி விடுகிறோம்.   
சரியான வழிகாட்டுதல் இல்லாமல் அந்த நேரத்தில் மனதில் பட்டதை செய்து விடுகிறோம். தப்பாகும் போது பின்னர் வருந்துகிறோம். ஆனால் காலம் கடந்து விடுகிறது. செய்த தவறை சரி செய்ய முடிவதில்லை.

அர்ஜுனன் - கிருஷ்ணர் என்ற ஒரு friend, philosopher and guide கிடைக்கப் பெற்றான். பகவத் கீதையின் முழுவதையும் உபதேசம் செய்து விட்டு கிருஷ்ணர் அவனிடம் - 'அர்ஜுனா! சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன். நீ உணர்ந்து செய்ய வேண்டியதை செய்' என்று சொன்னார். Unfair advantage எடுத்துக் கொள்ளவில்லை. நமது குறை என்னவென்றால் நமக்கும் இப்படிப்பட்ட ஒரு friend, philosopher and guide கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் நாம் அவர்களின் அறிவுரையைக் கேட்பதில்லை. 

No comments:

Post a Comment