Thursday, October 27, 2011

Chapter 3 - Karma Yoga [21-30]

21.
யத் யத் ஆசரதி ஸ்ரேஷ்டஸ் தத்ததே வேதரோ ஜந:
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் தத் அநுவர்த்ததே
சான்றோன் எதைச் செய்கிறானோ, அதையே மற்றவர்களும் செய்வார்கள். அவன் எதை தகுதியாக நிர்ணயிக்கின்றானோ, அதையே உலகமும் பின்பற்றும்.  

22.
ந மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந 
நா நவாப்தம் அவாப்தவ்யம் வர்த்த ஏவ ச கர்மணி
அர்ஜுனா! இந்த மூவுலகில் நான் செய்வதற்கு என்று எதுவுமே இல்லை, அடையாமல் உள்ளது என்று எதையும் அடைய வேண்டியதில்லை. இருந்தும் நான் என்னைக் கடமையில் ஈடுபடுத்திக் கொள்கிறேன்.

23.
யதி ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கர்மண்ய தந்த்ரித: 
மம வர்த்மாநு வர்தந்தே மநுஷ்யா: பார்த்த ஸர்வச:
அர்ஜுனா! நான் தளராமல் என்னைக் கடமையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாமா? அப்பொழுது தானே மக்கள் எல்லா வழியிலும் என் பாதையைப் பின்பற்றுவார்கள்.

24.
உத்ஸீதேயுர் இமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம்
ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாம் உபஹந்யாம் இமா: பிரஜா:   
நான் கடமையைச் செய்யவில்லை என்றால், இந்த உலகங்கள் அழிந்து விடும். வர்ணக் குழப்பம் ஏற்படும், உயிர்கள் அழிந்து விடும். 

25.
ஸக்தா: கர்மண்ய வித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத
குர்யாத் வித்வாம் ஸ்ததா(அ)ஸக்தச் சிகீர்ஷூர் லோக சங்க்ரஹம் 
பாரதா! அறிவீனர்கள் கடமையின் மீது பற்று கொண்டு செயல்படுகிறார்கள். அதனால் சான்றோர் லோக க்ஷேமத்தை மனதில் கொண்டு பற்றில்லாமல் செயல் பட வேண்டும்.

26.
ந புத்தி பேதம் ஜநயேத் அஜ்ஞாநாம் கர்ம ஸங்கிநாம்
ஜோஷயேத் ஸர்வ கர்மாணி வித்வாந் யுக்த: ஸமாசரந்
எந்த சான்றோனும், கடமையில் பற்று கொண்டு அஞ்ஞானத்தில் உள்ளவர்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்கட்டும். அவன் அவர்களை எல்லாச் செயல்களிலும் ஈடுபடுத்தி, அவனே அவற்றை பக்தியோடு நிறைவேற்ற வேண்டும்.

27.
ப்ரக்ருதே: க்ரியமாணாநி கு(ग)ணை: கர்மாணி ஸர்வச:
அஹங்கார விமூடாத்மா கர்தாஹம் இதி மந்யதே
பிரக்ருதி என்ற ஒன்றின் குணங்களைக் கொண்டே எல்லாச் செயல்களும் நடைபெறுகின்றன, எவன் ஒருவன் மனது 'தான்' என்ற ஒன்றால் மூழ்கடிக்கப்பட்டுள்ளதோ, அவன் 'தான்' தான் செய்தோம் என்று எண்ணிக் கொள்கிறான். 

28.
தத்த்வவித்து மஹா பாஹோ குண கர்ம விபாகயோ:
குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே
பெருந் தோள்களைக் கொண்ட அர்ஜுனா! எவன் ஒருவன் குணங்களின் விபாகம் (பிரிவுகள்) மற்றும் அதன் செயல்களைத் தெரிந்து கொண்டுள்ளானோ, அந்த குணங்கள் என்ற குணமே, குணங்கள் என்ற இந்திரியங்களிடையே உழலுகின்றன என்ற உண்மையை அறிந்துள்ளானோ - அவன் எதிலும் பற்று வைப்பதில்லை.  

29.
பிரக்ருதேர் குண ஸம்மூடா: சஜ்ஜந்தே குண கர்மஸு 
தாந் அக்ருத்ஸ்ந விதோ மந்தாந் க்ருத்ஸ்ந விந்ந விசாலயேத்
பிரக்ருதி (இயற்கை) என்ற ஒன்றின் குணங்களால் மூழ்கடிக்கப் பட்டவர்கள், குணங்களின் செயல்கள் மீது பற்று கொண்டுள்ளார்கள். பூர்ண ஞானம் கொண்ட ஒருவன், முழுமையான ஞானம் பெறாத ஒரு மூடனை தடுமாற வைக்கக் கூடாது. 

30.
மயி ஸர்வாணி கர்மாணி ஸந்ந்யஸ்யாத்யாத்ம சேதஸா
நிராசீர் நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர:
எல்லாக் கடமைகளையும் என்னிடம் விட்டு விட்டு, மனதை பிரம்மத்தில் செலுத்தி, நிராசை, தான் என்ற எண்ணம், மனக் குழப்பம் இல்லாமல் நீ சண்டை இடு. 

விசாரம்
மனுஷ குணம் மற்றவர்களை follow செய்து, அவர்கள் என்ன செய்கிறார்களோ அதையே செய்ய ஆசைப் படுவது. அது நல்லதா, கெட்டதா என்று பகுத்தறியும் புத்தி எல்லாருக்கும் இருப்பதில்லை. எனவே சான்றோர்களுக்கு ஒரு முக்கிய கடமை உள்ளது - lead by example. இங்கிருந்து தான் கிருஷ்ணர் தன்னை ஒரு பரமாத்மாவாக நிலை நிறுத்த ஆரம்பிக்கின்றார். அவர் செய்வதற்கு / அடைவதற்கு என்று ஒன்று இவ்வுலகில் எதுவுமே இல்லை - ஏனென்றால் அனைத்தின் கர்த்தாவும் அவர் தானே. அதற்காக அவர் சும்மா இருந்தால், மற்றவர்களும் அப்படியே இருந்து விடுவார்களே. உலகில் செயல்கள் சரியாக
நடக்கவில்லை என்றால் உலகமே அழிந்து விடுமே. அதனால் அவரும் இங்கே ஒரு leader ஆக இருந்து தான் கடமையைச் செய்வதன் மூலம் மற்றவர்களுக்கு வழிகாட்டுகிறார். 

எல்லோருமே கடமையின் பலன்கள் மீது ஆசை கொண்டே செயல்கள் புரிந்தால் லோக க்ஷேமம் எப்படி கிடைக்கும். அதனால் சான்றோரின் அடுத்த கடமை நிஷ்காம்யமாக இந்த செயல்களைச் செய்வது. எல்லோருக்கும் எல்லா ஞானமும் இருப்பதில்லை. ஞானம் கொண்ட ஒருவன், அஞ்ஞானத்தில் உள்ளவர்களை மேலும் குழப்பாமல், அவர்களுக்காகவும் பக்தியுடன் செயல் புரிய வேண்டும்.

பிரக்ருதி என்ற ஒன்றின் குணங்களாலேயே இந்த உலகின் இயக்கமே அமைந்துள்ளது. இந்த குணங்கள் மூன்று வகைப்பட்டது - சத்வம், தமஸ் மற்றும் ரஜஸ். எவன் ஒருவன் இந்த பிரக்ருதியின் குணங்கள் என்ற ஒன்றாலேயே இந்த உலகின் குணங்கள் (செயல்கள்) நடைபெறுகின்றன என்ற உண்மையை அறிந்துள்ளனோ அவனே நிஷ்காம்யமாகச் செய்யும் பக்குவத்தை அடைகிறான். ஆனால் இதை உணராத ஒருவன் தன்னால் தான் எல்லா செயல்களும் நடைபெறுகின்றன என்ற தற்பெருமை கொள்கிறான். 

கிருஷ்ணர் தன்னை பரமாத்மாவாக காட்டி, எல்லாச் செயல்களையும் தன்னிடம் சமர்ப்பித்து, ஆசை எதுவும் இல்லாமல், தான் என்ற எண்ணம் இல்லாமல் அர்ஜுனனை ஆத்மா என்ற ஒன்றில் ஒன்றி இங்கே போரிடச் சொல்கிறார். அர்ஜுனன் சாதாரண மனிதன் தானே, அவனுக்கு பல கேள்விகள் எழுகின்றன. அவனது எல்லா சந்தேகங்களையும் போக்கி இதே அறிவுரையை 18 ம் அத்யாயத்திலும் கூறுகிறார். அந்த கேள்விகள் என்ன என்று அடுத்துப் பார்ப்போம். 

ஸ்மார்த்த தர்மத்தில் ஒரு செயலை ஆரம்பிக்க பரமேஸ்வரனின் அநுக்ரஹம் தேவை. அதனால் ஆரம்பத்தில் 'மமோபாக்த சமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்' என்று அந்த பரமேஸ்வரனின் ப்ரீதியை/ அனுக்ரஹத்தைக் கேட்கிறோம். கடைசியாக சொல்வது 'காயேன வாசா' ஸ்லோகத்தை. அதன் ரெண்டாவது வரியில் வருவது 'நாராயணாயேதி சமர்ப்பயாமி'. அந்தக் காரியம் நல்லபடியாக முடிந்ததற்கு நாராயணனுக்கு நன்றி சொல்லி 'சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் அஸ்து'  என்று சொல்லி அந்த செயலின் பலனை கிருஷ்ணருக்கே (அல்லது இஷ்ட தெய்வத்திற்கு) அர்ப்பணம் செயகிறோம். இதன் பரிபூர்ண அர்த்தம் நாம் அந்த பூஜையின் பலனின் மீது ஆசை வைக்கவில்லை, நிஷ்காம்யமாக செய்கிறோம் என்பதற்காகத் தான். இதை மனதில் கொள்ள ஆரம்பித்தால் நாளடைவில் எல்லாச் செயலுமே (ஈஸ்வர உபாசனையோ/மற்றதோ) நிஷ்காம்யமாகச் செய்யும் பக்குவம் வரும். 
   

3 comments:

  1. // 'சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் அஸ்து' என்று சொல்லி அந்த செயலின் பலனை கிருஷ்ணருக்கே (அல்லது இஷ்ட தெய்வத்திற்கு) அர்ப்பணம் செயகிறோம். இதன் பரிபூர்ண அர்த்தம் நாம் அந்த பூஜையின் பலனின் மீது ஆசை வைக்கவில்லை, நிஷ்காம்யமாக செய்கிறோம் என்பதற்காகத் தான். இதை மனதில் கொள்ள ஆரம்பித்தால் நாளடைவில் எல்லாச் செயலுமே (ஈஸ்வர உபாசனையோ/மற்றதோ) நிஷ்காம்யமாகச் செய்யும் பக்குவம் வரும். //

    அருமை.

    பகவத் கீதைக்கு விளக்கம் அழகாக புரியும் படி எழுதுகிரீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Harrah's Casino, Las Vegas - MapYRO
    Harrah's 남원 출장안마 Hotel 나주 출장마사지 and Casino is a Las Vegas casino, hotel and destination with a casino, a seasonal 강원도 출장샵 outdoor 경상북도 출장마사지 pool and 안양 출장마사지 free shuttle.

    ReplyDelete