Monday, August 8, 2011

Chapter 1 - Arjuna Vishaadha Yoga [31-40]

31.
நிமித்தாநி ச பஷ்யாமி விபரீதாநி கேசவ
ந ச ஸ்ரேயோ(அ)நு பஷ்யாமி ஹத்வா ஸ்வஜநம் ஆஹவே
கேசவா! நான் கெட்ட சகுனங்களைக் காண்கிறேன். என் உறவினர்களைப் போரில் கொல்வதில் நான் எந்த நன்மையையும் காணவில்லை.

32.
ந காங்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச 
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா 
கிருஷ்ணா! நான் வெற்றியையோ, சுக போகத்தையோ, ராஜ்யத்தையோ விரும்பவில்லை. கிருஷ்ணா! ராஜ்யமோ, சுகபோகமோ ஏன் உயிராலோ என்ன பயன்?

33.
யேஷாம் அர்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகா: ஸுகாநி ச 
த இமே(அ)வஸ்திதா யுத்தே ப்ராணாம்ஸ் த்யக்த்வா தநாநி ச
யாருக்காக நாம் ராஜ்ஜியம், சுகம், போகம் இவற்றை விரும்புகிறோமோ, அவர்கள் இங்கே யுத்தத்தில் உயிரையும், செல்வத்தையும் துறந்து நிற்கிறார்கள்.

34.
ஆசார்யா: பிதர: புத்ராஸ் ததைவ ச பிதாமஹா:
மாதுலா: ச்வசுரா: பௌத்ரா: ச்யாலா:  ஸம்பந்திநஸ் ததா: 
ஆசார்யர்கள், தந்தைகள், புத்திரர்கள், பாட்டன்கள், தாய்மாமன்கள், மாமனார்கள், பேரன்கள், மச்சினர்கள், உறவினர்கள்,

35.
ஏதாந் ந ஹந்தும் இச்சாமி க்நதோ(அ)பி மதுஸூதந 
அபி த்ரைலோக்ய ராஜ்யஸ்ய ஹேதோ: கிம் நு மஹீக்ருதே
கிருஷ்ணா! மண்ணிற்காக அவர்களைக் கொல்வது மட்டும் அல்ல - மூவுலகின் ஆளுகை கிடைத்தாலும், அவர்கள் என்னைக் கொன்றாலும், நான் அவர்களைக் கொல்ல விரும்ப மாட்டேன்.

36.
நிஹத்ய தார்தராஷ்ட்ராந்ந: கா ப்ரீதி: ஸ்யாஜ் ஜனார்தந
பாபம் ஏவாஷ்ரயேத் அஸ்மாந் ஹத்வைதாந் ஆததாயிந:
திருதராஷ்டரனின் இந்தப் பிள்ளைகளைக் கொல்வதால் எந்த திருப்தி நமக்குக் கிடைக்கும் ஜனார்தனா? இந்தப் பாவிகளை கொன்ற பாவம் தான் சேரும்.

37.
தஸ்மாந் நார்ஹா வயம் ஹந்தும் தார்தராஷ்ட்ராந் ஸ்வபாந்தவாந் 
ஸ்வஜநம் ஹி கதம் ஹத்வா ஸுகிந ஸ்யாம மாதவ
அதனால் உறவினர்கள் ஆன திருதராஷ்டரனின் இந்தப் பிள்ளைகளை - நம் உறவினர்களை நாம் கொல்லக் கூடாது. மாதவா! நம் உறவினர்களை கொன்று, நாம் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்.

38.
யத்யப்யேதே ந பஷ்யந்தி லோபோ பஹத சேதஸ:
குலக்ஷயக்ருதம் தோஷம் மித்ர த்ரோஹே ச பாதகம்
பேராசை அவர்களின் புத்தியை மழுங்கடித்தாலும், குலம் அழிவதின் தீமையையோ, நண்பர்களிடையே துரோஹம் உண்டாக்குவதன் பாவத்தையோ அவர்கள் காணாவிட்டாலும்,

39.
கதம் ந ஜ்ஞேயம் அஸ்மாபி: பாபாத் அஸ்மாந் நிவர்திதும் 
குலக்ஷயக்ருதம் தோஷம் பிரபஷ்யத்பிர் ஜனார்தந
நாம் ஏன் குலம் அழிவதின் தீமையைக் நன்கு கண்டுணர்ந்து , இந்தப் பாவத்தில் இருந்து விலக கற்றுக் கொள்ளக் கூடாது ஜனார்தனா?


40.
குலக்ஷயே பிரணஷ்யந்தி குல தர்மா: ஸநாதநா:
தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நம் அதர்மோ(அ)பி பவத்யுத
ஒரு குலம் அழிவதால், காலம் காலமாக அந்தக் குடும்பம் பின்பற்றி வந்த தர்ம அனுஷ்டானங்கள் அழிகிறது. தெய்வீகம் அங்கே அழியும் போது, முழு குடும்பத்தையும் பக்தியின்மை ஆக்கிரமிக்கின்றது.

விசாரம்
அர்ஜுனன் - அவனுக்குப் பல பெயர்கள் உண்டு. கிருஷ்ணருக்கு ரொம்பப் பிரியமான பெயரான பார்த்தன், குந்தியின் பிள்ளையாதலால் கௌந்தேயன், தனுர் (வில்) வித்தையில் சிறந்தவன் என்பதால் தனஞ்சயன், வெற்றியே கண்டதால் விஜயன், ambidexterous என்று சொல்வதைப் போன்று ரெண்டு கைகளாலும் ஒரே சமயத்தில் வில்லை இயக்கத் தெரிந்தவன் என்பதால் சவ்யசாச்சி.

Focussed mind கொண்டவன். துரோணரிடம் பாண்டவர்களும், கௌரவர்களும் சிறு வயதில் வில் வித்தை கற்ற போது, துரோணர் மரக் கிளைகளின் இடையே ஒரு பொம்மையை வைத்து அதன் கண்ணில் அம்பை விட தன் சீடர்களிடம் சொன்னார். ஒவ்வொருவரிடமும் அம்பை விடும் முன்னே அவர்களுக்கு என்ன தெரிகின்றது என்று கேட்டார். மற்றவர்கள் கிளை தெரிகிறது, மரம் தெரிகிறது, பொம்மை தெரிகிறது என்று சொல்ல அர்ஜுனனோ பொம்மையின் கண் தெரிகிறது என்று தனது குறியில் கவனமாக இருந்தான். சரியாக அம்பை அந்தக் கண்ணில் செலுத்தினான்.

திரௌபதி ஸ்வயம்வரத்தில் போட்டி கடினமானது. மேலே உத்தரத்தில் ஒரு மச்ச (மீன்) யந்திரம் சுழன்று கொண்டிருக்கும். இப்பொழுது உள்ள ceiling fan போன்று.  கீழே ஒரு உருளியில் திரவம் இருக்கும். அதில் தெரியும் அந்த யந்திரத்தின் பிம்பத்தைப் பார்த்து அம்புகள் விட வேண்டும். நேராகப் பார்த்து விடக் கூடாது. அதில் அவன் ஒருவனே சரியாக அம்பை விட்டு திரௌபதியை வென்றான்.

அஞ்ஞான வாசத்தில், விராட தேசத்தில் அவன் ப்ருஹன்னளை என்ற நபும்சகன் ஆக மறைந்து வாழ்ந்த போது படை எடுத்து வந்த கௌரவ சேனையை தனி ஒருவனாக நின்று வென்றான்.

இப்படிப்பட்ட திறமைகளைக் கொண்ட அர்ஜுனன் இந்த குருக்ஷேத்ரத்தில், உறவுகள், ஆச்சார்யர்கள், நண்பர்கள் மீது கொண்ட பாசம் ஆகிய மாயையினால் இவ்வாறு கூறுகிறான்.

பொதுவாக நமது ஹிந்து தர்மத்திற்கு சனாதன தர்மம் என்ற பெயர் உண்டு. ஹிந்து என்ற பெயரே மேற்கத்தியவர் வைத்தது தான் - இந்துஸ் நதியின் கரையில் வசிப்பவர்கள் என்பதால். இந்த சனாதனம் என்பதற்கு காலம் காலமாக, பாரம்பரியமான என்று அர்த்தம். முன்பு ஒவ்வொரு குடும்பமும், அவர்களின் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த தர்மங்களை, அனுஷ்டானங்களைப் பாதுகாத்து வந்தார்கள். 40 வது ஸ்லோகத்தில் சொன்ன படி, தெய்வீகம் குறையும் போது மனதில் அசுத்தம் நுழைகிறது. நாளடைவில் அது தெய்வ பக்தியின்மையாகி அந்த குடும்பத்தை அழித்து விடுகிறது. அதை தான் இப்பொழுது காண்கிறோம். முடிந்த வரை, கால அவகாசத்தைப் பொறுத்து குல தர்மங்களைப் பாதுகாக்க வேண்டும்.

2 comments:

  1. Ayya,

    You are in a great mission. Thanks a lot for your service. Our best wishes.

    Regards,

    T.Thalaivi.

    ReplyDelete