Monday, February 14, 2011

Soundarya Lahari 54

பவித்ரீ கர்தும் ந: பசுபதி பராதீந ஹ்ருதயே
தயா மித்ரைர் நேத்ரை: அருண தவல ச்யாம ருசிபி:
நத: சோணோ கங்கா தபந தநயேதி த்ருவமமும்
த்ரயாணாம் தீர்த்தானாம் உபநயஸி ஸம்பேதம் அநகம்


Oh one whose heart is owned by Lord Shiva!
Your eyes which are the companions of mercy are colored in red, white and black and these resemble the holy rivers - Sonabhadra which is red, Ganga which is white and Yamuna - the daughter of Sun which is black. The confluence of these sacred rivers removes all the sins of the world. We are certainly sure that in order to make us - the ones seeing You as holy, You made the three rivers meet and join.


சிவனுக்குச் சொந்தமான இதயத்தைக் கொண்டவளே!
கருணைக்கு இணையான உனது கண்கள் சிவப்பு, வெள்ளை
மற்றும் கருப்பு நிறங்களில் உள்ளது. அவை புனித ஆறுகளான -செந்நிறத்தை உடைய சோனபத்ரா, வெண்மையான கங்கை மற்றும் கரு நிறத்தில் உள்ள சூரியனின் புத்திரியான யமுனையை ஒத்திருக்கின்றன. பவித்ரமான இந்த ஆறுகளின் சங்கமம் உலகில் உள்ள
எல்லாப் பாவங்களையும் போக்குகின்றன. உன்னைக் காணும் எங்களையெல்லாம் புனிதமாக்கவே நீ இந்த மூன்று ஆறுகளையும் சந்திக்க வைத்து சங்கமிக்க வைத்தாய் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

2 comments:

  1. //சிவனுக்குச் சொந்தமான இதயத்தைக் கொண்டவளே!
    // சிவனுக்கு சொந்தமான ஹ்ருதயமே அது கிடையாது!னு வேடிக்கையா சொல்லுவா, அதான் இடது பாகம் முழுசும் பவானிக்கு தானே சொந்தம், அப்புறம் அந்த பக்கம் இருக்கும் ஹ்ருதயமும் அவளோடுதுதானே!!..:) ரசித்தேன்!..:)

    ReplyDelete
  2. சிவனோட இதயத்தைப் பத்தி நீ சொல்றாய். ஆனா இந்த ஸ்லோகம் பவானியோட இதயத்தைப் பற்றி சொல்லறது இல்லையா?
    சிவனோட இடது பாகம் உமா எடுத்துண்டதாலே அந்த பக்கம் இருக்கற இதயமும் எடுத்துக்கறா. அதே மாதிரி சிவனுக்குள்ள ஐக்கியம் ஆனதாலே உமாவோட இதயத்தை சிவன் எடுத்துக்கறார். Since they have given their hearts to each other they are the perfect made for each other.

    ReplyDelete