Saturday, January 22, 2011

Soundarya Lahari 16

கவீந்த்ராணாம் சேத: கமல வந பாலாதப ருசிம்             
பஜந்தே யே ந்த: கதிசித் அருணா மேவ பவதீம்          
விரிஞ்சி பிரேயஸ்யா: தருணதர ச்ருங்கார லஹரீ
கபீராபி: வாக்பி: விதததி ஸதாம் ரஞ்ஜநமமீ

To the lotus forest like mind of the kings of poets of the world, She is like
an early morning purple hue. Because of this, She is called ARUNA - the
purple coloured one. She creates happiness in the holy people's minds
with a tender and passionate wave of words of Saraswathi - Brahma's
consort and these words are royal and youthful.

தாமரை வனம் போன்ற மனதினை உடைய உலகின்
புலவர்கள் இடையே சிறந்தவர்களுக்கு, அவள் ஒரு
அதிகாலை நேரத்து ஊதா நிறத்தவளாக இருக்கின்றாள்.
இதனால் தான் அவளை அருணா - சிவப்பு நிறத்தவள்
என்கிறோம். புனிதர்களின் மனதில் அன்பான, கருணையான வார்த்தைகளின் அலைகளால் ஆனந்தத்தை அளிக்கின்றாள்.
பிரம்மாவின் துணை சரஸ்வதியின் இவ் வார்த்தைகள்
ராஜ கம்பீரத்தோடும், யௌவனத்தோடும் உள்ளன.

2 comments:

  1. அருணா - ஊதா நிறத்தவள் //

    ம்ஹும் சரியில்லையே ஸ்ரீநி. இங்கே அர்த்தமே மாறுது. அருணா என்றால் சிவந்த நிறத்தவள் என்று தான் அர்த்தம். அருணன் தானே முதலில் தோன்றுவான் சூரியோதயத்துக்கு முன்னாடி. செக்கச் சிவந்த அந்த அருணனின் நிறத்தை ஒத்திருப்பதால் அருணா. சிந்தூராநன வர்ணா என்று லலிதா சஹஸ்ரநாமம் ஆரம்பிக்குமே! அதோடு அபிராமி பட்டர் வேறே உதிக்கின்ற செங்கதிர் என்று சொல்லி இருப்பார். எல்லாத்தையும் கொஞ்சம் படிச்சுக்குங்க. பொதுவான மொழிபெயர்ப்பை விட நம்மோட ஆழ்ந்த படிப்பில் உணர்வு பூர்வமா மொழிபெயர்த்தால் நல்லா இருக்கும். இது என்னோட சொந்தக் கருத்துப்பா! :D

    ReplyDelete
  2. மாற்றி விட்டேன் கீதா மாமி.
    உண்மை தான் - கொஞ்சம் translation literal 'a பண்ணாம இருக்கேன்.
    தவறுகளை திருத்தியதற்கு நன்றி.

    ReplyDelete